இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாக். ட்ரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள்

ஜம்மு: இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோனை கதுவா மாவட்ட பகுதியில் இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தல்லி ஹரியா சக் எல்லையில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) இன்று காலை பறந்து சென்றது. இப்பகுதியானது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த இந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனுடன், பேலோட் இணைப்பு உள்ளது. கைப்பற்றப்பட்ட ட்ரோனை, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்’ என்றன.

Related Stories: