மதுரை: பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய கூட்டத்தை மே 31ம் தேதி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனையோ, முடிவோ கூட்டத்தில் எடுக்கக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை அளித்துள்ளது. வழக்கு குறித்து ஒன்றிய, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவர்கள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.