கடலூர்: கடலூரில் பாதிரிக்குப்பம் பகுதியில் பல ஆண்டுகளாக போராடி வரும் கணிக்கர் இன மக்களுக்கு முதற்கட்டமாக 24 மாணவ, மாணவிகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. கூத்தப்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இச்சான்றிதழ் வழங்கியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இச்சமூக மக்கள் நன்றி தெரிவித்தனர்.