சென்னை: சென்னை ராயப்பேட்டை ஜெ.ஜெ.கான் 2வது தெருவை சேர்ந்தவர் கான்பாஷா(33). ஐஸ்அவுஸ் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை உட்பட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலைவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் முன்பு இனி நான் எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன் என்று ஓராண்டு கால நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தை மீறி கடந்த 7ம் தேதி ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த முகமது ஜகூர் என்பவரை தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.