கொல்கத்தா: ‘ஹிட்லர் ஆட்சியை விட பாஜவின் ஆட்சி மோசமானது’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஹிட்லர், பெனிட்டோ முசோலினி போன்றவர்களின் கொடுங்கோல் ஆட்சியை விட பாஜவின் ஆட்சி மோசமானது. பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு, ஒன்றிய விசாரணை அமைப்புகளைக் கொண்டு மாநில விவகாரங்களில் தலையிடுகிறது.