மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலாளி தற்கொலை

கடலூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (43). கூலித் தொழிலாளியான இவர், 9ம் வகுப்பு படிக்கும் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 4 மாத கர்ப்பம் அடைந்துள்ளார்.

இது குறித்து அறிந்த கலியபெருமாளின் மனைவி, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த 24.12.2020ல் கலியபெருமாளை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகளையே பலாத்காரம் செய்த காரணத்தால், கலியபெருமாளை பார்க்க நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவரை ஜாமீனில் எடுக்க யாரும் முயற்சி செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கலியபெருமாள் நேற்று மதியம் கடலூர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்த போலீசார் சென்று கலியபெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: