ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கடல் உள்வாங்கியதுடன் படகுகள் கரைதட்டி உள்ளன. ராமேஸ்வரத்தை அடுத்துள்ள சங்குமால், ஒலைக்குடா, அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக கடல் உள்வாங்கி காணப்படுகிறது. கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாடு படகுகள் தரை தட்டி உள்ளது. அப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் நங்கூரம் வெளியில் தெரியும் நிலையில் காணப்படுகின்றன. 3-வது நாளாக கடல் உள்வாங்கி காணப்படுவதால் நாட்டுபடகு மீனவர்கள் படகுகளை கடலுக்குள் செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில், புனித நீராட வந்திருந்த பக்தர்கள் கடல் நீர் உள்வாங்கியதால் நீண்ட தூரம் நடந்து சென்று புனித நீராடினர்.