காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயிலில் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 13 ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாவின் போது பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விழாக்களில் பங்கேற்பதையும் பார்க்க முடிகிறது. பெருமாள் தேரில் அமர்ந்து நகரின் ராஜ வீதிகளில் பவனி வருவது காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும்.