மேச்சேரி: தாரமங்கலம் அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி விழுந்து முதியவர் பலியானார். இந்த துக்கத்தில் அவரது மனைவியும் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பண்ணன்(95). இவரது மனைவி குஞ்சம்மாள் (92). நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின்போது பாப்பண்ணனின் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது. இரவு நேரம் என்பதால் முதிய தம்பதியால் தண்ணீரை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் இருவரும் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கினர். இரவு 11 மணியளவில் பாப்பண்ணன் கட்டிலில் இருந்து இறங்கியுள்ளார்.