பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலாவில் இருந்து கரியசோலை, ராக்வுட், நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் தினமும் அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இந்நிலையில், சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகள் உள்ளிட்ட முற்புதர்கள் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் குறித்து தெரியாமல் இருப்பதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.