ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டிய ஃபேஸ்புக் நண்பர்!: மற்றொரு நண்பனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய இளம்பெண்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டிய ஃபேஸ்புக் நண்பனை, நண்பர்கள் உதவியுடன் இளம்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் பிரசாந்தி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த திருமணமான சுவேதா ரெட்டி என்பவருக்கும், அம்மர்பேட்டையை சேர்ந்த யாஷ்மா குமார் என்ற புகைப்பட கலைஞருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசும்போது சுவேதா அந்தரங்கமாக இருந்ததாக தெரிகிறது. இதை பதிவு செய்துகொண்ட யாஷ்மா குமார், தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தியது மட்டுமின்றி சொத்துக்களையும் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இதற்கு உடன்படவில்லை எனில் சுவேதாவின் வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்பி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுவேதா மற்றொரு ஃபேஸ்புக் நண்பர் அசோக் உதவியை நாடியுள்ளார். இருவரும் யாஷ்மா குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக யாஷ்மா குமார் பயணிக்கும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மடக்கிய அசோக், தன் கூட்டாளிகளுடன் யாஷ்மா குமாரை சரமாரியாக அடித்துவிட்டு தப்பிவிட்டனர்.

படுகாயமடைந்த யாஷ்மா குமார் அங்கேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அந்த பக்கம் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது யாஷ்மா குமார் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், இந்த கொலையில் சுவேதாவிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தனர்.

Related Stories: