மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியம், கினார் கிராமத்தில். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, எம்பி செல்வம் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் கினார் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். அவர்கள், நிலத்தில் விளைவித்த நெல் மூட்டைகளை, இடைத்தரகர்கள் இல்லாமல் அரசு நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, விவசாயி கள் பயன்பெறும் வகையில், அதே கிராமத்தில் அரசு சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது.