சென்னை: மீஞ்சூர் அருகே 10 பேர் கும்பலால் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன்(50). அதிமுக பிரமுகரான இவர். நேற்று இரவு குருவிமேடு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் குடும்பத்துடன் சென்றார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது குருவிமேடு அசோக் லைலண்ட் கம்பெனி அருகே டிப்பர் லாரி ஒன்று மனோகரன் சென்ற கார் மீது மோதியது. காரிலிருந்து இறங்கிய ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை லாரியில் வந்த 10 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து லாரியில் தப்பிச் சென்றனர். உடன் சென்ற மனைவி, மகள்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.