சின்னசேலம்: வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டிலும் அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்தும் நோக்கத்தில் ஒரு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கட்டம்மாபேட்டை 13வது வார்டில் மேஸ்திரி ராஜா, குடிநீர் திட்ட பணியாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் வார்டு கவுன்சிலர் பெரியம்மாள் முன்னிலையில் தார் சாலை ஓரம், தெருக்கள், மும்முனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் 30 பெண் மற்றும் 20 ஆண் துப்புரவு பணியாளர்கள்மூலம் மண்வெட்டி, களைக்கட்டு கொண்டு சுத்தம் செய்தனர்.