தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தலில் திமுக-வும் அதிமுக-வும் நேரடியாக மோதின. தேர்தலில் திமுக-வுக்கு 4 வார்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட அதிமுக-வுக்கு 4 வார்டுகளும் கிடைத்தன. திமுக, அதிமுக தலா 4 இடங்களை பெற்று சமநிலையில் இருந்ததால் தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்ய முடியாதபடி இழுபறி நிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.