வத்திராயிருப்பு அருகே ரேஷன் கடை மேற்கூரை சேதம்-புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே ரேஷன்கடை மேற்கூரை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.வத்திராயிருப்பு அருகே ரெங்கப்பநாயக்கர்பட்டியில் எண் 2வது ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த ரேஷன்கடை கட்டிடத்தை எந்தவித பராமரிப்பு பணிகளும் செய்யாததால் இந்த அளவிற்கு சேதமடைந்துள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதில் அரசி உள்ளிட்ட பொருட்கள் வைத்துள்ளதோடு சிறப்பு அங்காடியாகவும் செயல்பட்டு வருகிறது.

கடையில் உள்ள ஊழியரும் ஆபத்து என தெரிந்தும் வேறு வழியின்றி வேலை செய்து வருகிறார். அதோடு பொருட்கள் வாங்கக்கூடிய பொதுமக்களும் அச்சத்துடன்தான் நிற்கின்றனர்.

எனவே உடனடியாக இந்த ரேஷன் கடையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இந்த கட்டிடம் முழுவதையும் இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: