சென்னை: உலக பொருளாதார மாநாட்டில் தெற்காசியாவில் இருந்து தமிழகத்திற்கு மட்டுமே பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக உயர்மட்ட குழு ஒன்று சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டவோஸ்கரில் உலக பொருளாதார மாநாடு வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் இந்த மாநாட்டை உலக பொருளாதார அமைப்பு நடத்தி வருகிறது. அந்தவகையில் 4வது தொழில் புரட்சியை மையப்படுத்தி இந்த மாநாடு நடக்க இருக்கிறது.
அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில், டென்மார்க் உள்ளிட்ட 10 நாடுகள் அங்கு அரங்குகள் அமைக்கின்றன. தெற்காசியாவில் இருந்து தமிழகம் மட்டுமே தேர்வாகி இருக்கிறது. அதன்படி, தமிழக அரசின் சார்பில் அங்கு சிறப்பு அரங்கம் அமைப்பட உள்ளது.