சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பல்லாவரத்தில் இருந்து 4 பேர் கொண்ட நபர்கள் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு, தாம்பரத்தை நோக்கி டாடா இண்டிகா காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை வழியே வந்து கொண்டிருந்த பொழுது, காரின் பின்புறம் புகை கிளம்பியுள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் காரை சாலையின் இடதுபுற ஓரமாக நிறுத்தி உள்ளார். பின்னர், காரில் இருந்த 4 பேரும் உடனடியாக காரை விட்டு வெளியேறி உள்ளனர். காரின் பின்புறம் ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது.