ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த போட்டியில், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் பவுலா படோசா, ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் மோதினார். இதில் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் கசட்கினா வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர் 6-3, 6-2 என கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவையும், கிரீசின் மரியா சக்கரி 6-2, 7-5 என அமெரிக்காவின் கோகா காப்பையும் வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தனர். கனடாவின் பியான்கா ஆண்ரெஸ்கு, பெலாரசின் அரினா சபலென்கா ஆகியோரும் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.