அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மீது ஏறி உயர்மின் அழுத்த கம்பியை பிடித்து தற்கொலையில் ஈடுபட முயன்றவரை ரயில்வே பாதுகாப்புப்படையினர் சாதுர்யமாக காப்பாற்றி இருக்கின்றனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில், சென்னையில் இருந்து வந்த மின்சார ரயில் நடைமேடை 7ல் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ரயிலின் மேற்கூரை மீது ஏற முயற்சி செய்த முதியவரை ரயில்வே பாதுகாப்புப்படை வீரரான ஜிஜெந்திரா என்பவர் பார்த்து ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தார். இதனால் உயர்மின் அழுத்த கம்பியின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த முதியவர் ரயில் கூரை மீது ஏறி உயர்மின் அழுத்த கம்பியை பிடித்து தற்கொலை செய்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.