பாலக்காடு: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் கடத்திய 56 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு இன்ஸ்பெக்டர் னிவாசன் தலைமையில் கலால்துறை அதிகாரிகள் நேற்று பிபிஎல் சந்திப்பு சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வழியாக பாலக்காடு நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் சந்தேகப்படும்படி ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.