சின்னாளபட்டி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கன்னிவாடி பேரூராட்சியின் பொது மயானம் செம்பட்டி சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே உள்ளது. இம்மயானம் போதிய பராமரிப்பின்றி சீமைகருவேல முள்மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. தவிர மயானம் புதர்மண்டி கிடப்பதால் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களும் உள்ளது. மேலும் மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் கை, கால்களை சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.