வால்பாறை: வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக மே இறுதி வாரத்தில் துவங்கும் மழை தற்போது மே2ம் வாரம் தொடங்கி உள்ளது. வானம் தொடர்ந்து கரு மேகங்களுடன் காட்சி அளித்து வருகிறது. குளிர் காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட அணைகளில் நீர் பிடிப்பில் முக்கியமான அணையாக கருதப்படும் சோலையார் அணை நீர் மட்டம் குறைந்து மண்திட்டாக காட்சி அளிக்கிறது. மேலும் கீழ் நீரார், மேல்நீரார் அணைகளும் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. விரைவில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.