கோவை: கோவையில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்கள் மற்றும் 2 டன் சாத்துக்குடி பழங்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கோவை பெரியக்கடை வீதி, வைசியார் வீதி உள்ளிட்ட இடங்களில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 6 குழுக்களாக சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 12 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.