சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.41 கோடி பக்தர்கள் காணிக்கை

முசிறி: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இந்த கோயிலுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் தினம்ேதாறும் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலின் உண்டியல்களை திறந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.

கோயில் ஆணையர் கல்யாணி தலைமை வகித்தார். பக்தர்கள் காணிக்கையாக ரூ.1 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 635 ரொக்கம், 2.879 கிலோ தங்கம், 5.177 கிலோ வெள்ளி, 112 அயல்நாட்டு நோட்டுகள் இருந்தது.

Related Stories: