புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட ஜஹாங்கீர்புரியில் வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. தற்போது இவ்விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், டெல்லியின் ஷாஹீன் பாக் (சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடந்த இடம்) பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை கடந்த 5ம் தேதி அகற்ற ெதற்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் திட்டமிட்டது. ஆனால், போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லாததால், ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று ஷாஹீன் பாக் ஆக்கிரமிப்பு பகுதிக்கு ஜேசிபி, புல்டோசருடன் வந்த தெற்கு டெல்லி முன்சிபல் அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.