புதுக்கோட்டை: விராலிமலை ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடியை தாண்டி ஆடுகள் விற்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை வழக்கம்போல இன்று அதிகாலை 4 மணிக்கு கூடியது. நாளை மறுநாள் விராலிமலை அம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில், ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக ஆடுகளை வாங்க குவிந்தனர். 7 கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை ரூ.9 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.