ஹன்னோவர்: ஜெர்மனியில் இலங்கைத் தமிழர்கள் இணைந்து கட்டியுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஹன்னோவர் என்ற இடத்தில் இலங்கை தமிழர்கள் முத்துமாரியம்மன் கோயிலை கட்டியுள்ளனர். அங்கு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. காலை யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று பூர்ணாகுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து விமான நிலையத்தை அடைந்தது.