சென்னை: ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணிகள் நடப்பதால் 11ம் தேதி மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது, என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பகுதி 15க்கு உட்பட்ட, ஒக்கியம் துரைப்பாக்கம், பி.டி.சி பகுதியில் நடைமேம்பாலம் அருகில் ஒஎம்ஆர் சாலையில் 500 மி.மீ. விட்டமுள்ள பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணிகள் 11ம் தேதி மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.