காபூல்: பொது இடங்களில் புர்கா உடை அணிந்து வர வேண்டும் என்று ஆப்கான் பெண்களுக்கு தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க கூட்டு படைகள் வெளியேறியதையடுத்து, தலிபான் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் பல்வேறு பெண் உரிமைகள் மறுக்கப்பட்டன. ஆனால் இம்முறை பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என ஆரம்பத்தில் தலிபான்கள் கூறினார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிராக தங்களின் பழைய கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விதித்து வருகின்றனர். சில நாள்களுக்கு முன், 6ம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதித்தனர். இந்த சம்பவத்திற்கு உலகின் பல்வேறு நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன. ஆப்கன் தலைநகர் காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க தலிபான்கள் தடை விதித்துள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது.