திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு இன்று அதிகாலையில் சசிகலா வந்தார். கையில் வெள்ளி வேலினை எடுத்துச் சென்ற அவர், அங்கு உண்டியலில் அதை செலுத்தினார். பின்னர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சசிகலா அளித்த பேட்டி: அதிமுக தொண்டர்கள் தான் தலைவர்களை உருவாக்குகிறார்கள்.