கொல்கத்தா: துர்காபூஜைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்ததைக் குறிக்கும் வகையில், ஒன்றிய சுற்றுலா அமைச்சகம் சார்பில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மண்டபத்தில் ‘முக்தி-மாத்ரிகா’ என்ற கலாசார நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மனைவியுமான டோனா கங்குலியின் ஒடிசா நடனக் குழுவின் நிகழ்ச்சி நடந்தது. டோனா கங்குலியின் சிறப்பான நடன நிகழ்ச்சியை அமித் ஷா, கவர்னர் ஜெகதீப் தன்கர் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.