கடந்த 2 நாட்களில் இன்ஜினியரிங் படிப்புக்கு 42,114 பேர் விண்ணப்பம்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியான நிலையில், இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவும் தொடங்கியது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். முதல் நாளான நேற்று முன்தினம் 20 ஆயிரத்து 97 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 5,812 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும், 1,519 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்து இருந்தனர்.

2வது நாளான நேற்று 21,017 பேர் கூடுதலாக விண்ணப்பப் பதிவு செய்தனர். அதுபோல, 10,368 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியும், 4 ஆயிரத்து 36 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்து இருந்தனர். இதையடுத்து மொத்தம் இதுவரை 42 ஆயிரத்து 114 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 180 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியும், 5 ஆயிரத்து 555 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர்.

The post கடந்த 2 நாட்களில் இன்ஜினியரிங் படிப்புக்கு 42,114 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: