திருவனந்தபுரம்: டைரக்டர் சனல்குமார் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாலும் அதற்கு மறுத்ததால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சியதாலும் தான் அவர் மீது நடிகை மஞ்சு வாரியர் புகார் கொடுத்தார் என்று பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர் இவர் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார். இந்நிலையில் நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகளை கொல்ல நடிகர் திலீப் தலைமையில் சதித்திட்டம் நடந்ததாக டைரக்டர் பாலச்சந்திரகுமார் என்பவர் கூறினார். இது தொடர்பாகவும் மஞ்சு வாரியரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகை மஞ்சு வாரியர் டைரக்டர் சனல்குமார் சசிதரனுக்கு எதிராக கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜுவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சனல்குமார் சசிதரனை கைது செய்தனர். மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரை சிலர் சிறை வைத்துள்ளனர் என்றும் சனல்குமார் சசிதரன் கூறியது தான் அவரது கைதுக்கு காரணம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவரது கைதுக்கு என்ன காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.