திருமலை: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு ஆண்டுதோறும் 3 கட்டங்களாக குடிநீர் விநியோகம் செய்வது வழக்கம். ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு ஒப்பந்தப்படி ஆந்திர அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை கண்டலேறு அணை செயற்பொறியாளர் விஜய்குமார், தெலுங்கு கங்கை திட்ட தலைமை பொறியாளர் ஹரி நாராயணா ஆகியோர் உத்தரவுப்படி கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.