தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்தது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல்லில் மழை பெய்யும் எனவும், நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்தது.   

Related Stories: