திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2 வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு கடைகளை அடைத்து வருமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமையிலான நிர்வாகிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். இதற்கு நேர்மாறாக கடைகளை அடைக்க வேண்டாம் என வணிகர் சங்க பேரவையினர் நோட்டீஸ் கொடுத்ததாக தெரிகிறது.