தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே குதிரையை அடித்து கொன்ற சிறுத்தை மீண்டும் குதிரை பண்ணைக்கு வந்து சென்றதை, சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பேளாளம்-நெல்லுமார் சாலையில் பெங்களூருவைச் சேர்ந்த அல்லிஉல்லாகான் (50) என்பவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் உள்ளது. இந்த பண்ணையில் 20க்கும் மேற்பட்ட குதிரைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி அதிகாலை, பண்ணைக்குள் நுழைந்த மர்மவிலங்கு, 7 வயது பெண் குதிரையின் மீது பாய்ந்து கழுத்தை கடித்து குதறி, அதனை கொன்று உடலை சாப்பிட்டு சென்றது. காலையில் வழக்கம்போல பண்ணைக்கு வந்த பணியாளர்கள் பெண் குதிரை உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.