பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த சின்னநாகபூண்டியில் பாழடைந்த கட்டிடத்தில் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வந்தது. உடைந்து விழும் அபாய நிலையில் இருந்த கட்டிடத்தில் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்து வந்தனர். இந்நிலையில், புதிய கட்டிடம் கட்ட ஏதுவாக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.34.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கால்நடை மருந்தகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருத்தணி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தாமோதரன் தலைமை வகித்தார்.