சென்னை: வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஒரே நாளில் பல நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்தடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வருகைப் பதிவேட்டில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற தகவல் பரவியது இந்த நிலையில் வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது.