ஆலங்குடி: ஆலங்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை பத்திரமாக மீட்கப்பட்டது.ஆலங்குடி அருகே உள்ள மேலப்பட்டி ரசியமங்கலம் பகுதியை சேர்ந்த நேரு என்பவருக்கு சொந்தமான 100 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு உள்ளது. இந்த கிணற்றில் கும்மங்குளம் பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை தவறி விழுந்தது.