பொங்கலூர் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவி திடீர் சாவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே காட்டூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அம்மாபாளையத்தை சேர்ந்த மணிகண்டனின் மகள் நிதர்சனா (13) என்பவர் 7 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு சென்ற நிதர்சனா திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நிதர்சனாவை மீட்டு பொங்கலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நிதர்சனாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: