திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே காட்டூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அம்மாபாளையத்தை சேர்ந்த மணிகண்டனின் மகள் நிதர்சனா (13) என்பவர் 7 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு சென்ற நிதர்சனா திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நிதர்சனாவை மீட்டு பொங்கலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.