ஆலந்தூர்: மடிப்பாக்கம், பெரியார் நகரை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் செல்வத்தை (37), கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி கொலை செய்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவு குற்றவாளியான கமுதி முத்துசரவணனை (31) தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன் கைது செய்து விசாரித்தனர். அதில், கொலை செய்யப்பட்ட செல்வத்திற்கும் வட்ட துணை செயலாளர் குட்டி (எ) உமா மகேஸ்வரன் (43), சகாய டென்சி (55) ஆகியோருக்கும் இடையே போட்டி இருந்துள்ளது.