சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசுகையில், ‘குரோம்பேட்டை பான்ஸ் கம்பெனி ரயில்வே மேம்பால பகுதியில் இருந்து திருநீர்மலை சாலை - திருமுடிவாக்கம் சாலை 7 கிலோ மீட்டரில் உள்ளது. இருவழி சாலையாக இருக்கின்ற காரணத்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயில், சிட்கோ தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாக உள்ளதால், அந்த பகுதியை கடந்து செல்ல ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, குரோம்பேட்டை-திருநீர்மலை-திருமுடிவாக்கம் சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும்,’ என்றார்.