15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் தென்றல் நகரை சேர்ந்த ஒரு தம்பதி கொத்தனார் வேலை செய்கின்றனர். இவர்களின் 15 வயது மகள், திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23ம்தேதி மதியம் அங்குள்ள கடைக்கு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆய்வாளர் விஜயராகவன் வழக்கு பதிவு செய்து சிறுமியை பற்றி விசாரித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தபோது பதற்றத்துடன் பேசினார். இதையடுத்து அந்த நபரை காவல் நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த தமிழரசன் (20) என்பதும் மேற்கண்ட சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரிந்தது. அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். இதன்பின்னர் தமிழரசனை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: