தஞ்சை: தஞ்சை களிமேடு பகுதியில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தேர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.