சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், பாபநாசம் ஜவாஹிருல்லா(மமக), ‘‘பாபநாசம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை உள்ளடக்கி ஒரத்தநாடு மின் கோட்டம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் மக்கள் அங்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் சீரான மின் விநியோகத்தை பெறுவதில் சிக்கல் இருக்கிறது. சாலிமங்கலத்தில் புதிய மின் கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.