தமிழகம் முழுவதும் புதிய மின் கோட்டங்கள் அமைக்க துறை ரீதியான பணிகள் நடந்து வருகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், பாபநாசம் ஜவாஹிருல்லா(மமக), ‘‘பாபநாசம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை உள்ளடக்கி ஒரத்தநாடு மின் கோட்டம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் மக்கள் அங்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் சீரான மின் விநியோகத்தை பெறுவதில் சிக்கல் இருக்கிறது. சாலிமங்கலத்தில் புதிய மின் கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில் ‘‘தமிழகத்தில் 3 புதிய மண்டலங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. புதிய மின் கோட்டங்கள் அமைப்பது தொடர்பாக துறை ரீதியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் 3.24 கோடி மின் இணைப்புகள் இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் கோட்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது” இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: