புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 600 காளைகள் பங்கேற்றுள்ளன. விராலிமலை மெய்யகுன்றியால் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.45 மணிக்கு தொடங்கியது. மாலை வரை சுமார் 600 காளைகள் களமிறக்கப்படும் இந்த போட்டியில், 200 மாடுபிடி வீரர்கள், 3 சுற்றுகளாக களம்காண்கின்றனர். வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வரும் காளைகளை திறமையுடன் பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.