சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கூலிப்படைத் தலைவனை போலீசார் கைது செய்தனர். சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்டச் செயலாளராக இருந்த செல்வம் என்பவரை கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இச்சம்பவத்தில் கூலிப்படை ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பின்பு போலீசார் தனிப்படை அமைத்து முன்னதாக 5 பேரை விக்கிரவாண்டியில் கைது செய்தனர். அதன்பின், கூலிப்படை தலைவன் முருகேசன் என்பவரை வியாசர்பாடியில் போலீசார் கைது செய்தனர். திமுக பிரமுகர் வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முத்து சரவணன் என்ற பிரபல ரவுடியையும், இந்த வழக்கில் தொடர்பு இருந்தாக கூறி கைது செய்துள்ளனர்.