பந்தலூர்: கேரளா மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது. மாவோயிஸ்ட்கள் பழங்குடியினர் மக்களை சந்தித்து அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் தமிழக எல்லைப்பகுதில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் மாவோயிஸ்ட்கள் ஊடுறுவலை தடுப்பதற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் முகாம் அமைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருகின்றது.